Latest News

  

இந்தியாவின் வளர்ச்சியை சீனா வாய்ப்பாகவே கருதுகிறது - சீனா

சீனப் பிரதமர் வென் ஜியாபோ 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதயொட்டி, சீன அயலுறவுத் துறை உதவி அமைச்சர் ஹூ ஜென்குவே பீஜிங்கில் செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவுடன் விவாதிப்பதிலிருந்து எந்த ஒரு பிரச்சனையையும் நாங்கள் விலக்கி வைக்கவில்லை., விசா வழங்குவது போன்ற பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட இருநாடுகளிடையேயான அதிகாரிகள் பேசுவார்கள் என்று கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சியை சீனா ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது, மேலும் அதன் வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவே கருதுகிறது. சீனப் பிரதமரின் இந்தியப் பயணம், இருநாடுகளின் உறவுகளுக்கான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்..நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், வளர்ந்து வரும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் வென் ஜியாபோ கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வென் ஜியாபோவின் வருகையால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவுகள் மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக சீன பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.