
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மம்தா கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் பாஜகவுக்கு தாவினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கிட்டதட்ட பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்புகள் கூறின.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதன்பிறகு பல்லேறு அதிரடி திருப்பங்கள் அங்கு நிகழ்ந்து வருகின்றன. அதாவது, மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் 24 பேர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று கொல்கத்தாவில் பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்தேறியுள்ளன. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள், ஆளுநர் ஜெகதீஷ் தன்கரை சந்தித்தனர்.
ஆனால் மொத்தம்
உள்ள 74 பேரில், 24 எம்.எல்.ஏக்கள் பங்கேற்காதது பாஜக தலைமைக்கு கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. இந்த 24 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு திரிணாமுல்
காங்கிரஸ் கட்சிக்கு திரும்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலர்
மீண்டும் கட்சிக்கு திரும்ப போவதாக மம்தாவிடம் விருப்பம் தெரிவித்துள்ள
நிலையில், பாரஜகவின் முக்கிய தலைவர்களான ரஜிப் பானர்ஜி, திபென்டு பிஸ்வாஸ்
ஆகியோர் மம்தாவின் கட்சிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள்
ஒன்றிய அமைச்சரும், 5 ஆண்டுகளாக பாஜகவின் தூணாக இருந்தவருமான முகுல் ராய்,
மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பிவிட்டார். இவரை தொடர்ந்து பல
எம்.எல்.ஏக்கள் திரிணாமுல்லுக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது.
மேலும், தாங்கள் பாஜகவுக்கு சென்றது தவறு தான் என கூறி நிர்வாகிகள் பலர் கடந்த வாரம் வீதிகளில் நின்று மக்களிடம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment