
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து புகாரினை பெற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்தக்கோரி பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அப்பள்ளிகள் மீது புகாரளிக்க feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ள அறிவுறித்தப்பட்டுள்ளது.
ஆகவே, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சார்பான கல்விக் கட்டணம் குறித்தான புகாரினை feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சென்னை வாழ் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment