
திருப்பூர்:
திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர்
சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் வேலை
முடிந்து நேற்று இரவு பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில்
புறப்பட்டனர்.
திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால்
சென்ற லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத
சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட
நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது
உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர்
மொக்கையனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுகுறித்து
தகவல் கிடைத்ததும் திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின்
உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment