Latest News

  

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்கக் கோரி மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிடுக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
 இது குறித்து அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 
 
 
மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து படகு ஒன்றில் 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடி தளத்தில் இருந்து படகு ஒன்றில் 4 மீனவர்களும் 2ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இலங்கை சிறைகளில் உள்ள 48 தமிழக மீனவர்கள், 122 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக படகுகள் சேதமடையாமல் மீட்க, இலங்கை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏழை மீனவர்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.