காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி
நடத்திய பேரணியின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பதற்றம்
ஏற்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்காக நீரை கன்னடர்கள் மறுத்து வருகின்றனர். இதைக்
கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி
புதுப்பேட்டை வரை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்ட
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இப்பேரணி புதுப்பேட்டையை சென்றடைவதற்கு முன்னதாக திடீரென இளைஞர் ஒருவர்
கர்நாடகாவைக் கண்டித்து திடீரென ஒருவர் நெருப்பை தம் மீது பற்ற வைத்து
தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து
காப்பாற்றி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தீக்குளிக்க முயற்சித்த இளைஞர் மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்று முதல்
கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment