தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது. தமிழகத்துக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் வெளியேற்றும் மதகுகள் திறக்கப்பட்டு 3.000 கனஅடி நீர் இடுக்கி அணைக்கு திறக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் 142 அடி உயர்வை அடுத்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். வல்லக்கடவு, ஐயப்பன்கோவில், மஞ்சுமலை, வண்டிப்பெரியாறு ஊர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment