தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், காலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் முரளி,கோனேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவரின் மகன் சரத்குமார், அயிமிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி பிரேமா, ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சாந்தி மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக உயிரிழந்த இந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்


No comments:
Post a Comment