Latest News

வெளிநாட்டு வாழ்க்கை !?



என் நெஞ்சம் அது இன்று புண்ணாச்சி,
வெளி நாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி

நித்தம் அதை நினைத்து நினைத்து வெம்புகின்ற மனசே...
தூக்கம் இன்றி புறண்டு கண்ணீர் சிந்தும் விழியே 
நெஞ்சில் வேதனை வாழ்வில் சோதனை சேர்ந்திருக்க

எத்தனை வண்டி எத்தனை வேலை போவதும் வருவதும் 
பிடிக்கவே இல்லை சம்பளம் இல்லை சாப்பாடு தொல்லை 
நினைக்கையில் இருக்கவே விருப்பம் இல்லை.

மூளை கெட்ட ஒரு வேலைதான் வந்தது என்றும் இனி போகாது சோகம்
அது தன்னந் தனியா நான் ஏறி வந்தது, இன்று வெறும் சோகமாய் 
ஆனது அதை எண்ணி எண்ணி மனம் நாட்டு நினைவில் பாடு படுதப்பா

ரோட்டிலே வேலை மேட்டிலே வேலை ஒரு சிலர் படுவதும் பெரும் அவதி
பார்க்கவும் இயலா தாங்கவும் இயலா கொடுப்பதோ கையிலே குறைந்த நிதி, 
கேடு கேட்டு போனாலும் நாட்டோடு போ, 
இங்கு வந்து சாகாமல் வீட்டோடு போ

இங்கு ஒன்றும் சேராது நீ எண்ணிக்கோ,
நல்ல நிலை நான் சொல்லுகிறேன் நீ கேட்டுக்கோ, 
உன் அன்பு மனைவியும் செல்லக் குழந்தையும் பாவம்மா

என் நெஞ்சம அது இன்று புண்ணாச்சி,
வெளிநாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி

குறிப்பு : இது எல்லோருக்கும் பொருந்தாது, அடிமட்ட சம்பளத்துக்கு வந்து அவதிப்படுவோருக்கு மாத்திரம் எழுதப்பட்டதாகும்.

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)


நன்று : ஜமால் காக்கா

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.