Latest News

  

உன்னைத்தான் கேக்கிறேன்....! “தில்லு” இருக்கா ? சொல்லேன் பாப்போம் !

1. தங்களின் கட்சிக்காக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு................

2. கட்சியின் “தல” பிறந்த / நினைவு நாளுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு................

3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு................

4. தங்களின் கட்சிக்காக தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு................

5. கட்சி ஆபிசில் கூட்டம் போட்டு வெட்டிப்பேச்சு பேசும் உங்களுக்கு............

6. தெருத் தெருவாக் கட்சிக் கொடி ஏற்றும் உங்களுக்கு......................

7. எங்கேயோ நடக்கும் மாநாட்டிற்காக வசூல் செய்து வேன்களில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு................

8. சீட்டுக்காக நோட்டுக்கள் செலவு செய்யும் உங்களுக்கு................

9. மதுபானக் கடைகளில் மாமுலாக ஊக்கம் பெரும் உங்களுக்கு.........................

10. கட்சிப் பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் குழி தோண்டும் உங்களுக்கு......................



நமதூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய....................
1. காஸ் தட்டுப்பாடு

2. “அதிரைப்பட்டினம்” புதிய பேருந்து நிலையம்

3. அரசு மருத்துவ மனை 24 மணி நேர கூடுதல் டாக்டருடன் சேவை

4. பாதாள சாக்கடைத் திட்டம்

5. புதிய “தீ” அணைப்பு அலுவலகம்

6. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு

7. அகல ரயில் பாதைத் திட்டம்

8. சமூக குற்றங்கள் ஒழிப்பு

9. கல்வி, சுகாதார விழிப்புணர்வு

10. வட்டி, லஞ்சம் ஒழிப்பு

11. ரேஷன் கடை முறைகேடுகள் தடுப்பு

12. முதியோர் நலன், வேலைவாய்ப்புகள்

13. இலவச மருத்துவ முகாம்

14. கோடைக் கால இலவசக் கல்விப் பயிற்சி


இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடி நமதூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்யத்தான் முடியுமா ?


 
உன்னைத்தான் கேக்கிறேன்........! “தில்லு” இருக்கா ? சொல்லேன் பாப்போம் !
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

1 comment:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.

    சகோதரர் அபூ இஸ்ரா அவர்களே தங்களின் கேள்விகள் அனைத்தும் நன்றாகவே உள்ளது ஆனால் இந்த கேள்விகளுகெல்லாம் பதில் எங்கே இருகிறது என்றுதான் தெரியவில்லை ஆனால் ஒன்று பதில் தெரிந்தாலும் யார் அதை செயல்படுத்துவதென்பது எல்லோரிடமு கேள்வி குறியாகதான் இருக்கிறது சமுதாய இயக்கமோ அரசியல் கட்சிகளோ செய்யபோவது கிடையாது ஜமாத் தொண்டு நிர்வனோமோ அல்லது இளைஞர் அமைப்புகள் நினைத்தாள் தங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரமுடியும் ஆனால் இதற்க்கு இனைஞர்களில் ஒற்றுமை மிக அவசியம் . எனவே சிந்திக்க கூரியகள் இதற்க்கு நம் இனைய சமுதாயம் என்ன பதில் தரும்மென்று பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்.
    அலகான கேள்விகள் விழிப்புணர்வு தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நம்மாள் முடிந்த மாற்றத்தை கொண்டு வர நாம் ஒவ்வெருவரும் முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.