Latest News

  

அதிரையில் தீ விபத்து !



5 லட்ச்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் !

நமதூர் கடற்கரை தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் (42). சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுஜியா அம்மாள் அவர்கள் அதே தெருவில் குடியிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு நேற்று காலை சென்றார்.

இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது வீடு தீடிரென வீடு தீப்பிடித்து எரிந்தது... 
இதில் 15 பவுன் நகை ரொக்க பணம் ரூ. 55 ஆயிரம், வாசிங் மிஷின், கிரைண்டர், தொலைக்காட்ச்சி பெட்டி ,இரண்டு கம்ப்யூட்டர்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இதனை பொதுமக்கள் தண்ணிர் , மணலை கொண்டு அணைக்க முயன்றனர் தீ மள மள வென பரவியதால் அதிக பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீ யணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து(?) வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.