Latest News

  

இதயம் இடிந்ததே !

என் இதயமே இடிந்ததுஎன் தம்பி அந்த சோக
செய்தியை சொல்லி அழும்போது!

உங்களை எதிர்த்த நபர்களிடம் கூட
நீங்கள் அன்பு செலுத்த தயங்கியதில்லை!
சில நேரங்களில் என்னையும் தான்!

06.03.2011 அன்று காலை
நான் துபாயில் வேலைக்காக என்
அலுவலகம் செல்லும் போது!
உங்களின் இறந்த கோலம்
எப்படி இருக்குமோ! என்ற எண்ணோட்டம்!

மாற்று மதத்தார் கூட போற்றும்
அளவிற்கு! உங்களது ஜனநாயக போக்கு
இருந்தது.

இதற்காக தான் தமிழ்நாடு அரசு
உங்களை " கோட்டை அமீர்" என்று
அழைத்தது.

சில நேரங்களில் உள்ளூர்வாசிகள்
உங்களை எதிர்த்து இருக்கலாம்!
ஆனால்
அந்த மக்களை பக்குவப்படுத்திய
அதிரையின் தாய் தந்தை நீ!
இதை யாராலும் மறுக்க முடியுமா!

எனக்கு என்ன பொறாமை தெரியுமா!
இந்த தேசத்தில்! ஏன் இந்த உலகில்!
ஐந்து அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக
இல்லை இல்லை..

ஒரு குடும்பத்தையே ஒற்றுமையாக்கி!
ஒரு பல்கலை கழகமாக மாற்றி!
இந்த அதிரை பட்டினத்தையே!
உன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாயே!
உன் நாடி நரம்பு அடங்கும் வரை!
இதை எவராலும் மறுக்க முடியுமா?
இந்த குணம் உலகில் எவருக்கும் உண்டா?
அது கேள்வி குறிதான்!

என்ன செய்வது? இறைவன்
இப்படி ஒரு தீர்ப்பை எழுதிவிட்டானே!
இதை மாற்ற முடியுமா?
இதை ஏற்க மட்டும் தான் முடியும்!

உங்கள் மறுவாழ்வில்! இறைவனிடத்தில்
சிறப்பான இடத்தை பெற!
அவனிடமே இரு கரம் ஏந்துகிறோம்!
நானும் என் குடும்பத்தவரும்
இடிந்த இதயங்களுடன்....

-அதிரை அஸ்ரப்

அண்ணாவியார் இல்லம்
மேலத்தெரு
அதிரை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.