உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை
விடுவிக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் உயர் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையம், உரிய காலத்தில்
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுகவும் தொடர்ந்த வழக்குகளை விசாரித்து
வரும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு
செப்டம்பர் 18-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட வேண்டுமெனவும், நவம்பர் 17-ம்
தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.
ஆனால் அதை அறிவிப்பாணை வெளியிட நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல்
ஆணையம், தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி
எம்.சுந்தர் அமர்வு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர்
ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
இருவரையும்
நவம்பர் 14-ம் தேதி ((நாளை)) மாலை 3.30 மீண்டும் ஆஜராக வேண்டும் என
நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை
விடுவிக்கக் கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
அதில், தொகுதி
மறுவரையறை செய்வதற்காக பயிற்சியளிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளதாகவும்,
மறுவரையறை பணிகள் தொடங்கியுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையில் குறிப்பிட்டபடி தொகுதி மறுவரையறை குழுவின் 5-வது கூட்டம்
நவம்பர் 9-ம் தேதி நடைபெற்றதாகவும், ஒவ்வொரு கட்டப் பணிகளும் முறையாக
நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட
தேதிக்குள் தேதியை அறிவிக்க கூடாது என்ற எவ்வித உள்நோக்கமும் இல்லை
என்றும், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்கி தேர்தலை நடத்துவதற்கு உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் பணிகள்
நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் தேதி
அறிவிக்கப்படாது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், நீதிமன்ற
அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை
வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment