பாரதிய ஜனதா கட்சியில் ஓபிஎஸ் அணி இணைய வேண்டும் என டெல்லி நெருக்கடி
கொடுப்பதால் தமிழகம் முழுவதும் இது தொடர்பாக ஆதரவாளர்களிடம் திடீரென
ரகசியமாக கருத்து கேட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது பரபரப்பை
கிளப்பியுள்ளது.
டெல்லியில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறப்பட்டு வர அழைப்பு வந்தது. டெல்லியில் முகாமிட்டு ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பின்னர் மைத்ரேயனுடன் இணைந்து மோடியை தனியாக சந்தித்தார்.
இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பாஜகவில் இணைவது தொடர்பாக ஆதரவாளர்களிடம்
ரகசியமாக ஓபிஎஸ் கருத்து கேட்டு வருகிறார்.
பாஜகவில் கூண்டோடு இணைய
நெருக்கடி கொடுக்கப்படுவதால்தான் கருத்து கேட்பதில் ஓபிஎஸ் அவசரம்
காட்டுவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஓபிஎஸ் பாஜகவில் இணையும் நிலையில்
எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை
முதலில் சந்தித்து காலூன்றிவிடலாம் என்பதுதான் பாஜகவின் கணக்காம்.
இதற்காகவே இந்த நெருக்கடி கொடுக்கப்படுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment