Latest News

`ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?' - உயர் நீதிமன்றம் கேள்வி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டுமெனவும், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபித்தும் தீபக், தீபா தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றம்
இதில் ஏற்கெனவே, ஜெயலலிதாவின் நான்கு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 17 கோடி ரூபாய் அளவிற்கு வரிபாக்கி உள்ளதாக வருமான வரித்துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா, தீபக் தரப்பில், `ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தாங்கள் வாரிசு என அறிவிக்க வேண்டும். வருமான வரி பாக்கியை தாங்கள் கட்ட தயாராக இருக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டது.
புகழேந்தி தரப்பில், `சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை மட்டுமே நியமிக்க வேண்டும். சொத்து, ஆட்சியரின் பொறுப்பில் இருப்பதால் தீபா, தீபக் அதற்கு வாரிசுரிமை கோரமுடியாது' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல அமலாக்கத்துறை சார்பில், `மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், `ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவில்லாமாக மாற்ற உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது' என கூறப்பட்டது.

தீபா
அப்போது நீதிபதிகள், `சொத்துகளை தீபா, திபக் ஆகியோர் உரிமை கோர முடியாது என்றால் மக்களுக்குக் கொடுப்பதுதான் மனுதாரரின் விருப்பமா?' என புகழேந்தி தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து நீதிபதிகள், `மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெல்லாம் உள்ளது? அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன ?' என்பது குறித்த முழு விவரங்களை வருமான வரிதுறை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவில்லமாக மாற்றும் பணி தற்போது என்ன நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கை ஆகஸ்ட் 5 ம் தேதி தள்ளி வைத்து, அன்றைய தினமே பதிலளிக்க வருமான வரித்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.