Latest News

உளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடி மாற்றம்- மன்னார்குடி குடும்ப உறவினர் நியமனம்!

 
தமிழக உளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு நெல்லையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் சசிகலாவின் மன்னார்குடி குடும்பம் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடிக்கிறது.

முதல் கட்டமாக ஆட்சிக்குள் தலையீடுகளை செய்யத் தொடங்கியுள்ளது. இதன்வெளிப்பாடுதான் உளவுத்துறை ஏடிஎஸ்பியான ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் இடத்தில் நெல்லையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மன்னார்குடி குடும்பத்தின் உறவினர் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.